மலச்சிக்கல் தீர லேகியம் – Malachikkal Theera Maruthuvam (constipation) - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Thursday, July 30, 2020

மலச்சிக்கல் தீர லேகியம் – Malachikkal Theera Maruthuvam (constipation)

மலச்சிக்கல் தீர லேகியம் செய்முறை – Malachikkal Theera Maruthuvam In Tamil

மலச்சிக்கல், மலக்கட்டு குணமாக சித்த மருத்துவம்
Malachikkal, Malakattu Gunamga Siddha Maruthuvam
மலச்சிக்கல் என்றால் என்ன
இயல்பாக மலம் வெளியேறாமல், மலம் இறுகி, மலம் கழிப்பதில் சிரமம், மலம் முழுவதுமாகப் போகவில்லை என்கிற உணர்வு, மலம் வெளியேறாமல் ஆசனவாயை அடைப்பது போன்ற நிலைமைகளை மலச்சிக்கல் என்று அழைக்கிறோம். சராசரியாக ஒருவர் வாரம் 4 முறைக்கு குறைவாக மலம் கழிப்பது மலச்சிக்கல் ஆகும்.

மலச்சிக்கல் லேகியம் செய்ய தேவையானவை
திரிபலாச்சூரணம் 200 கிராம்
நீலாவரைச் சமுலம் சூரணம் 200 கிராம்
சீரகம் 200 கிராம்
கசகசா 200 கிராம்
இசப்பக்கோல் 200 கிராம்
சுக்கு  50  கிராம்
மிளகு  50  கிராம்
வாய்விடங்கம்  50  கிராம்
பசும் நெய் 500 கிராம்
தேன் 250 கிராம்
பனங் கருப்பட்டி 1 கிலோ
லேகியம் செய்முறை
ஒரு கிலோ பனங் கருப்பட்டியை நீரில் கரைத்து வடி கட்டி பாகு காய்ச்சி மேற்படி திரிபலா, நீலாவரைச் சூரணத்தை கொட்டி கிளறி  பசும் நெய் விட்டு கிளறி இறக்கி ஆறிய பின்  தேன் விட்டு கிளறி பாட்டலில் அடைத்து பத்திர படுத்தவும்,

மலச்சிக்கல் லேகியம் உட்கொள்ள வேண்டிய அளவு
இரவு உணவுக்கு பின் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்கவும்.

மலச்சிக்கல் லேகியம் பயன்கள்
இந்த மலச்சிக்கல் லேகியம் மலம் சார்ந்த நோய்கள் இன்றி மேலும் சில நோய்களையும் கண்டித்து வராமல் தடுக்கும். மலச்சிக்கல், மலக்கட்டு நீங்க, மூத்திர சூடு, மூத்தீர எரிச்சல், வெள்ளைபடுதல்,  குருதியை சுத்தபடுத்துதல் போன்ற பலன்களையும் தருகிறது.

மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வு
நெல்லி கடுக்காய் மலச்சிக்கல் சூரணம்
கடுக்காய் – 75 கிராம்
நெல்லிக்காய் – 75 கிராம்
ரோஜாப்பூ – 75 கிராம்
ஆவாரம்பூ – 75 கிராம்
சுக்கு – 75 கிராம்
ஓமம் – 75 கிராம்
தான்றிக்காய் – 75 கிராம்
வால்மிளகு – 75 கிராம்
நிலாவரை – 150 கிராம்
மலச்சிக்கல் சூரணம் செய்முறை
மேற் கூறிய மூலிகைகளை சேகரித்து (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க்கும்) நன்றாக காய வைத்து தனிதனியாக இடித்து சளித்து தூள் செய்து கொள்ளவும்.

மலச்சிக்கல் சூரணம் சாப்பிட வேண்டிய அளவு
தினமும் இரவு உணவுக்குப்பின் 2 கிராம் அளவு சூடான தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வர, தீராத மலச்சிக்கல், நாள்பட்ட மலக்கட்டு, மலம் கட்டியாக வெளியேறுதல் அல்லது சிரம பட்டு வெளியேற்றுதல் போன்றவை குணமாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad