குலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி – Kula Deivam Therinthu Kolvathu Eppadi - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Monday, June 1, 2020

குலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி – Kula Deivam Therinthu Kolvathu Eppadi

குலதெய்வம் கண்டறிவது எப்படி

kula deivam kandupidippathu eppadi

குலதெய்வம் என்றால் என்ன?

தமிழர்களின் ஒவ்வொரு குடுபத்திற்க்கும் குலதெய்வம் உண்டு, குலதெய்வம் மற்ற தெய்வங்களை விட மிகவும் வலிமையான தெய்வம் ஆகும் அதன் சக்தி அளவிடமுடியாதது. குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். கர்மவினைகளையும் நீக்க வல்லவை. நாமக்கு விருப்பமான தெய்வத்தை எவ்வளவு மனம் உருகி வணங்கினாலும் அவர்களின் அருள் குலதெய்வத்தின் அனுமதி இருந்தால் மட்டுமே கிடைக்கும். மற்ற தெய்வங்கள் தரும் நன்மை, தீமை அனைத்தும் குலதெய்வம் வழியே நம்மை வந்து சேரும். குலதெய்வ கோவிலுக்கு சென்று பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்

மறந்து போன குலதெய்வம் .

மாறிவரும் சூழ்நிலையின் காரணமாகவும் இடம் விட்டு இடம் பெயர்வதாலும், சரியான வழிகாட்டுதல் இல்லத காரணத்தாலும் தங்களுடைய குலதெய்வம் இன்னதென்று தெரியாமல், அந்த மகாசக்தி எங்கே இருக்கிறது என்று அறியாமலும் சிலர் தவித்து வருகின்றனர். எத்தனை மாகா சக்தி கொண்ட தெய்வங்களை வணங்கினாலும் அவர்களின் அருள் நம் குலதெய்வத்தின் வழியாகவே நாம்கிடைக்க பெற முடியும்.

குலதெய்வத்தை கண்டறியும் முறைகள்

தவரி விட்டுபோன ஒருவரின் குலதெய்வத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், அந்தக் குலதெய்வம் ஆண்தெய்வமா, பெண் தெய்வமா? எந்த இடத்தில் குடி கொண்டு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறது என்பதனை ஜோதிடம் மற்றும் மாந்திரீக மந்திரங்கள் மூலகமாகவும் அறிந்து கொள்ள முடியும்

ஜோதிட முறையில் குலதெய்வத்தை தெரிந்து கொள்ளும் முறை

ஒருவரின் ஜோதிடத்தில் பூர்வபுண்ணியஸ்தானம் எனப்படும் ஐந்தாம் வீட்டை ஆராய்ந்து சொல்ல வேண்டும் என வேதஜோதிடம் கூறுகிறது.  ஒருவரின் ஜாதகத்தில் ஐந்தாம்பாவம் பெண்ராசியானால் அவரது குலதெய்வம் அம்மன் என்றும், ஆண் ராசியானால் அவரது குலதெய்வம் அய்யன் என்பதும் பொதுவான விதிகளாகும். மேற்படி ஐந்தாம் பாவம் ராசி அல்லது நவாம்சத்தில் சனியின் வீடுகளானாலோ அல்லது சனிபகவான் அங்கே தொடர்பு கொண்டு இருந்தாலோ, அவரது குலதெய்வம் முனீஸ்வரன், வீரன், கருப்பன் போன்றவர்களும், செவ்வாயானால் ஆயுதம் தாங்கிய எல்லை காக்கும் வீரத்தெய்வங்கள் என்பதையும் ஜோதிடம் சொல்கிறது.
ஒருவரின் ஜாதகத்தில் அவருடைய ஐந்தாம் பாவமும், ஒன்பதாம் பாவமும் பாபக்கிரக ஆதிக்கத்தில் இருப்பது, பிதுர்தோஷம் இருப்பது, சுபர்கள் பலவீனம் பெற்று ராகுவின் அசுப பலம் ஓங்கியிருப்பது போன்றவகள் மூலம் குலதெய்வத்துடனான அவரது தொடர்பு விட்டுப் போயிருக்கிறது என்பதை ஒரு முழுமையான ஜோதிடரால் தெரிந்து கொள்ள முடியும்.

மாந்திரீக முறையில் குலதெய்வத்தை கண்டறிதல்.

அமாவசை அடுத்து வரும் புதன்கிழமை (வளர்பிறை புதன்கிழமை) அன்று பாம்பு புற்று இருக்கும் இடத்திற்க்கு சென்று புற்று மண் எடுத்து சிறிது சுத்தமான தண்ணீர் விட்டு பிள்ளையார் பிடித்து பூஜை அறையில் வைத்து வெற்றிலை பாக்கு, தட்சணை, ஒரு வெண்ணிற துண்டு (டவள்) வஸ்திரமாக வைத்து படையலாக ஒரு மண் அகலில் நெய் தீபம் ஏற்றி தேங்காய், பழம், பொரிகடலை மட்டும் வைக்கவும்

முன்னோர் வழிபாடு

மனதை கட்டுபடுத்தி நம் குலதெய்வத்தை எங்கு இருந்தாலும் காட்டுங்கள் இனி நான் தொடர்ந்து குலதெய்வ வழிபாடு செய்வேன் என்று உறுதியளித்து முன்னோர்களை வணங்கி வேண்டிக் கொள்ளவும்.

மந்திரம் உரு செய்தல்

என் குலதெய்வமே நீ எங்கு இருந்தாலும் வந்து எனக்கு அனுகிரம் புரி என்று நினைத்து கீழ் கண்ட மந்திரத்தை ஜெபம் செய்யவும்.
“சங் வங் சிவாய நம”
இம்மந்திரத்தை தினமும் 108 முறை உரு காலை மற்றும் மாலை செய்யவும் இவ்வாறு உறு செய்ய செய்ய 1008 உரு முடிந்தவுடன் அந்த மந்திர அதிர்வு நம் குலதெய்வத்தை ஆகர்ஷணம் செய்து 21 நாட்களுக்குள் நம் கனவில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நமக்கு தூக்கத்தில் காட்சி தந்தும் தான் இருக்கும் இடமும் வழிபாட்டு முறை அதற்கு உண்டான பூஜை முறைகளை கூறும்.

குலதெய்வ வழிபாடு விட்டுபோனால் உண்டாகும் தோஷங்கள்

பொதுவாக குலதெய்வ தோஷம் இருந்தால் எந்த முயற்சிகளிலும் வெற்றி கிடைக்காது, காரணமற்ற காரியதடைகள் அதிகமாகும், உறவுகளில் ஒற்றுமையின்மையும் குடும்ப அமைதியின்மையும் இருக்கும். குறிப்பாக திருமணம் வீடுகட்டுதல் போன்ற சுபகாரிய தடைகள் தொடரும். குழந்தையின்மை, குடும்பத்திற்கே வாரிசு இல்லாமல் போகுதல், தாள முடியாத தரித்திரம் போன்றவைகள் ஏற்படும்.

குலதெய்வ வழிபாட்டு முறைகள்

அம்சபீடம் வழிபாட்டு முறை

பல சந்தர்ப்பங்களில் குலதெய்வ கோவிலுக்கு போக முடியாத நிலையோ அல்லது கோவில் சிதிலமடைந்த நிலையோ இருக்கும் அத்தகைய சூழ்நிலையில் குலதெய்வத்தின் அம்சபீடம் வைத்து வீட்டிலேயே வழிபடுவது பலன் தரும். தந்த்ர சாஸ்திரத்திலும் ஆகமசாஸ்திரத்தின் சதாபத்ய அனுஷ்டனத்திலும் தெய்வ சக்திகளை யந்திர ரூபத்தில் ஆவாகனம் செய்து வழிபடும் முறைகள் சொல்லப்பட்டுள்ளன.

யந்திரரூபத்தில் பிரதிஷ்டை வழிபாட்டு முறை

குலதெய்வம் தெரியாதவர்கள் பிராணதேவதா பிரசன்ன முறையில் தங்கள் குல தெய்வத்தின் அம்சங்களை அறிந்துக்கொண்டு அந்த அம்சங்களுக்குறைய அட்சர அம்சங்களுடன் குலதெய்வத்தை யந்திரரூபத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் செய்யலாம்.

யந்திர பீடம் வழிபாட்டு முறை

குலதெய்வம் தெரிந்தும் அதன் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் குலதெய்வத்தின் ஸ்மர்த் பிரசாதத்துடன் (மண், விக்ரகம், கனி, கும்குமம் போன்றவை) அட்சர அம்சத்தை யந்திர பீடமாக்கி வீட்டில் வைத்து வருடம் ஒருமுறை வழிபடலாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad