கோரோசனை பயன்கள் – Korosanai Benefits In Tamil - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Monday, June 1, 2020

கோரோசனை பயன்கள் – Korosanai Benefits In Tamil

கோரோசனம் பயன்கள்

korosanai payangal in tamil

கோரோசனை வைத்திய முறைகள்
கோரோசனை சித்த மருத்துவத்திலும், மாந்திரீகத்திலும் அதிகளவு பயன்படுத்தப் படுகிறது.

கோரோசனை குணமாக்கும் நோய்கள்

கோரோசனைக்கும், மேகநீர், மேக வெட்டை, பித்த கோபம், உன்மத்தம், கணை மாந்தம், கபாதிக்கம், மசூரிகைப் புண் இவைகள் நீங்கும்.

கோரோசனை மருத்துவ பயன்

சித்த மருத்துவத்தில் நோய்களை குணமாக்கும் முக்கிய மருந்தாக சேர்க்கபடுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  சுரம், மாந்தம், கணை நோய் முதலியவற்றை குணமாக்கும் தன்மை கோரோசனை உண்டு.

இருமல்

வெற்றிலைச் சாற்றுடன் அல்லது கோரோசனை சேர்த்து, தேன் கலந்து கொடுத்தால்  இருமல் குணமாகும்

சீதளதம்

12 துளி தும்பை பூச்சாற்றுடன் தேன் கூட்டிக்கொடுக்கலாம் இதனுடன் கோரோசனை கூட்டிக் கொடுக்க விரைவில் சீதளத்தை நீக்கும்.

விந்து தம்பனம்.

ஆண்களுக்கு ஏற்ப்படும் விந்து துரிதகலிதம் நீங்க 1 கிராம் கோரோசனம் வாங்கி அதனுடன் சிறிது பச்சை கற்பூரம் கலந்து கல்வத்தில் மைபோல அரைத்து பூசி உறவு கொள்ள தம்பனம் ஆகும்.

சளி, இருமல், மாந்தம்

கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.

குழந்தைகளின் கபம், மாந்தம்

ஆமணக்கு எண்ணெய் அரை லிட்டர், இளங்கொழுந்து சாறு 1 லிட்டர், கருஞ் சீரகத்தூள் 15 கிராம், கோரோசனை ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் கோரோசனை நீங்கலாக மற்றவற்றை ஒன்று சேர்த்து காய்ச்சி தைலப்பக்குவத்தில் வடித்துக் கொண்டு கடைசியாக கோரோசனத்தை பொடித்துப் போட்டு நன்றாக கலக்கிக்கொள்ளவும், தாய்ப் பாலுடன் 8 மிலி தைலைம் சேர்த்து ஒரு வேளை கொடுக்கவும்.

ஆஸ்த்துமா குணமாக

கோரோசனை, இலவங்கம், குங்கும்ப்பூ, வகைக்கு 10 கிராம், வெள்ளெருக்கன் பூ 100 கிராம், மிளகு 50 கிராம், சேர்த்து  அரைத்து மிளகளவு மாத்திரையாகச் செய்து உலர்த்தி வைக்கவும். காலை,மாலை ஒரு மாத்திரை தேனில் சாப்பிட்டு வந்தால் ஒன்று அல்லது இரண்டு மண்டலங்களில் ஆஸ்த்துமா, இழப்பு, இரைப்பு,  காசம், குணமடையும்.

காயங்கள் குணமாக கோரோசனம்

புண்கள், காயங்கள் குணமாக கோரோசனை, ஓரிதழ்த்தாமரை முழுத் தாவரத்துடன் பச்சைக் கற்பூரம், ஆகியவற்றைச் சிறிதளவு கலந்து, பசையாக்கி, நெய்யுடன் கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.

இறை சக்தி

கோரோசனை ஆன்மீகத்தில் இறை சக்தியை ஆகர்ஷிக்க பூஜையறையில் வைத்துப் பூஜை செய்யலாம்.

கணவன் மனைவி பிரச்சனை தீர

கணவன் மனைவி இடையே பிரச்சினை  நீங்க, திருமணத் தடைகள் நீங்க இதைப் பூஜையறையில் வைத்து பூஜை செய்து வேண்டினால் கோரிக்கை நிறைவேறும்.

மந்திரீகம்

இதை  வைத்தால்,பில்லி,சூனியம்,செய்வினை எதுவும் வீட்டிற்குள் வராது.தொழில் முன்னேற்றம் கிடைக்கும்.

கோரோசனை வசியம்

ஒரிஜினல் கோரோசனையை வெள்ளி,ஞாயிறு அன்று தேனுடன் கலந்தும், செவ்வாய் புதன் பாலுடன் கலந்தும் திங்கள் வியாழன் நேய்யுடன் கலந்தும், மையாக இட்டு செல்ல அனைத்தும் வசியமாகும் சென்ற காரியம் சித்திக்கும்.

கோரோசனை திலக வசியம்

கோரோசனை, மச்ச கல்,  புற்றுதேனையும் சேர்த்து அரைத்து  நெற்றியில்  தடவிக் கொண்டு செல்ல, எதிரிகள் முதற் கொண்டு சகலரும் வசியம் ஆவார்கள்.
கோரோசனை பயன்படுத்தும் முறை

No comments:

Post a Comment

Post Bottom Ad