In TN Singleday 12 corona death cases கொரோனா: இன்று ஒரே நாளில் 12 பேர் பலி..! தமிழகத்தில் கொரோனா அதிகமாகி விட்டது. - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Friday, May 29, 2020

In TN Singleday 12 corona death cases கொரோனா: இன்று ஒரே நாளில் 12 பேர் பலி..! தமிழகத்தில் கொரோனா அதிகமாகி விட்டது.

தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு என்பது அதி வேகத்தில் அதிகரிகத்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில்
 கொரோனாவைத் தடுக்க எடுக்கும் நடவடிக்கைகள், பாதிப்பு நிலவரங்கள் ஆகியவை குறித்து தொடர்ச்சியாக பார்க்கலாம்.

இன்று தமிழகத்தில் மேலும் 827 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் பிற மாநிலங்களிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 117 பேர் அடங்குவர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 372 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 1253 கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 639 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10,548 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றோடு பலி எண்ணிக்கை 145 ஆகும். அதிகபட்சமாக இன்று சென்னையில் 559 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பரிசோதனை மையங்களில் 4 லட்சத்து 55 ஆயிரத்து 216 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. பிளாஸ்மா சிகிச்சையின் மூலமாக இதுவரை 7 பேர் குணமாகியுள்ளனர்.

சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் கொரோனா கட்டுப்பாட்டு நிலவரம் குறித்து மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad