முக்கிய நகரங்களில் ஜூன் 1 முதல் சிறப்பு ரயில் - டிக்கெட் கவுன்டர்களில் முன்பதிவு தொடக்கம் - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Saturday, May 30, 2020

முக்கிய நகரங்களில் ஜூன் 1 முதல் சிறப்பு ரயில் - டிக்கெட் கவுன்டர்களில் முன்பதிவு தொடக்கம்

முக்கிய நகரங்களில் ஜூன் 1 முதல் சிறப்பு ரயில் - டிக்கெட் கவுன்டர்களில் முன்பதிவு தொடக்கம்

தமிழகத்தில் முக்கிய நகரங்களுக்கு இடையே ஜூன் 1ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில், டிக்கெட்டிற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

தமிழகத்திற்குள் நான்கு பகல் - நேர ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, கோவையிலிருந்து மயிலாடுதுறைக்கும், விழுப்புரத்திலிருந்து மதுரைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதேபோல், கோவையிலிருந்து காட்பாடி மற்றும் திருச்சியிலிருந்து நாகர்கோவிலுக்கு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி, மதுரை உள்ளிட்ட ரயில்நிலையங்களின் டிக்கெட் கவுன்ட்டர்களில் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஆன்லைன் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad