நாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு? Nationwide Lockdown Likely To Extend Upto June 15 - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Saturday, May 30, 2020

நாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு? Nationwide Lockdown Likely To Extend Upto June 15

நாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு? Nationwide Lockdown Likely To Extend Upto June 15

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி பிறப்பித்தது.அதனைத்தொடர்ந்து, அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்ட முழு முடக்கத்தை வருகிற 31ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதேசமயம், பல்வேறு தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, உள்நாட்டு விமானப்போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
 ஜூன் 1ஆம் தேதி முதல் 200 ரயில்களில் சேவை தொடங்கவுள்ளது. பல்வேறு வகையான தொழில்களுக்கும் மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளது.


இதனிடையே, வருகிற 31ஆம் தேதியுடன் மத்திய அரசு அறிவித்த முழு முடக்கம் முடிவுக்கு வரும் நிலையில், அதற்குப் பின் பொது முடக்கம் தளர்த்தப்படுமா அல்லது தொடரப்படுமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் இதுவரை வெளியிடவில்லை.

அதேசமயம், கொரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,845லிருந்து 1,45,380ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதுதவிர, ஜூன் மாதத்தில் கொரோனா தொற்று பெருமளவில் இந்தியாவில் அதிகரிக்கும் என்று பல்வேறு மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருவதால் இந்த ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா என்ற கேள்வி பொதுமக்களிடையே பரவலாக எழுந்து வருகிறது.

மேலும், முழு முடக்கத்தை நீட்டிப்பதா, கைவிடுவதா, சில இடங்களைத் தவிர்த்து பல இடங்களில் தளர்வுகளை ஏற்படுத்துவதா என அரசு தரப்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, இது தொடர்பாக, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.


இந்த நிலையில், நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு முடக்கத்தை வருகிற ஜூன் மாதம் 15ஆம் தேதி வரை அதாவது மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவேளை முழு முடக்கம் நீட்டிக்கப்படும் பட்சத்தில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படும் என தெரிகிறது. முன்னதாக, கொரோனா வைரஸோடு வாழப்பழகிக் கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad